For Daily Alerts
Just In
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் 11 ஆம் தேதி சிறப்பு முகாம் - சந்தீப் சக்சேனா
சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் 11 ஆம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை வாக்காளராக தகுதி பெறும் நாளாக கணக்கிட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. எனினும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் 11 ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும்" என்று கூறினார்.
தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments
English summary
Voter list correction campaign announced again on 11th in this month, Sandeep saxena says.
Story first published: Wednesday, October 7, 2015, 9:44 [IST]