ஓட்டுப் போட்டதை உறுதி செய்யும் வி-பேட் இயந்திரங்கள்... நெல்லைக்கு கூடுதலாக 38 வருகை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை தொகுதிக்கு வாக்கு பதிவை உறுதி செய்யும் 38, விவி பேட் இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், ஆம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 தொகுதிகளி்லும் வாக்கு பதிவக்காக 2931 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

VV PAT machines arrived

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 தொகுதிகளில் மட்டுமே வாக்கு பதிவை உறுதி செய்யும், விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நெல்லை தொகுதிக்கு ஏற்கனவே 386 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால் இது ஒரு சில இயந்திரங்கள் பழுதாகி இருந்தன.

இதனால் நெல்லை தொகுதிக்கு வேறு 38 இயந்திரங்களை அனுப்பி வைக்குமாறு கலெக்டர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வேறு 38 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்த இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கு முந்தைய நாள் இந்த இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+