அட கெரகமே.. பிளீச்சிங் பவுடரை அந்தக் கம்பெனியில்தான் வாங்க வேண்டும் என்று சொல்றாராமே ஒரு விவிஐபி?
சென்னை: ஊரே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் நடந்த சோகத்தின் கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு அதிகார முக்கியஸ்தர், குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் பிளீச்சிங் பவுடரை வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக உள்ளது.
சென்னை நகரம் பெரும் மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் ஆகியவற்றால் சின்னாபின்னமாகி மாபெரும் குப்பைக் காடாக மாறிக் கிடக்கிறது. ஊரைத் துடைத்துச் சுத்தப்படுத்த பல நாட்களாகும் போல தெரிகிறது.

பல ஊர்களிலிருந்தும் துப்புறவுத் தொழிலாளர்கள் சென்னையில் முகாமிட்டு தலைநகரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொற்று நோய் பரவாமல் தடுக்க மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் பிளீச்சிங் பவுடரும் அடிக்கப்பட்டு வருகிறது.
இங்குதான் ஒரு கொடுமை நடந்து வருவதாக சொல்கிறார்கள். அதாவது பிளீச்சிங் பவுடரை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்தே கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அதிகாரத்தில் உள்ள அந்த விவிஐபி உத்தரவிட்டுள்ளதாம். வேறு இடத்திலிருந்து வாங்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
உண்மையான்னு தெரியலை.. உண்மையாக இருந்தால் இதை விட கேவலமான பிழைப்பு வேறு இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications