ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம் பொளேர்!

ஆட்சியைக் கலைக்க வேண்டும். உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக எம்எல்ஏக்களை சசிகலா கோஷ்டி பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த உண்மையை மூன் தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் தெரிய வந்துள்ளது.

 wants fresh elections, says Karthi Chidambaram

பணம் பெற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், என்னைப் பொறுத்தவரையில் தெளிவான அரசு தமிழகத்துக்கு தேவை. ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று ஒரு ஆட்சி அமைய வேண்டும். தற்போதைய அதிமுக அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லை.

இப்போதைய தலைமையை வைத்து சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனவே, ஆட்சியைக் கலைக்க வேண்டும். உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் தேர்தல் மூலம் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் குழப்பத்துக்குத் தீர்வு. இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+