ஊட்டி போக்சோ கேஸில் பாதிக்கப்பட்ட சிறுமி கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டாரா? நீலகிரி எஸ்பி விளக்கம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போக்சோ வழக்கில் கைதான இளைஞரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட சிறுமி கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் விளக்கம் அளித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்த புகாரின் பேரில், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரையும், சிறுமியையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, சிறுமியை தனியார் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட பதிவில், லகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் காவலர்கள் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்ணியமாக எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை குற்றவாளியைப்போல நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, இதற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே வழக்கு விசாரணை தொடர்பாக சிறுமியை கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பெண் போலீஸ், சிறுமியை கை விலங்குடன் அழைத்து சென்றதாக சர்ச்சை வீடியோ ஒன்றும் வெளியானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியும் போலீசார் என்னை கைவிலங்கு போட்டு அழைத்து சென்றதாக வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிறுமியின் தாய் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி நீதிமன்றத்திற்கு தனது மகளை அழைத்து சென்ற போது, கை விலங்கு போடப்பட்டு இருந்தது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து ஊட்டி துணை காவல் கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தேன். இதன்படி சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்திய போது, சிறுமி கைவிலங்கு போடவில்லை என்று மறுத்துள்ளார். வழக்கமாக உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிய பின் தான் கைவிலங்கு போட்டு, அதுவும் குற்றவாளிகளை தான் அவ்வாறு அழைத்து செல்ல முடியும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கை விலங்கு போடப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால், அவர் மாற்றி, மாற்றி பேசுகிறார். சிறுமியை அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா வீடியோக்களை சோதனை செய்துவிட்டோம். அதில் சிறுமிக்கு கைவிலங்கு போடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களில் உண்மை தன்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications