நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. 80 அடியை தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகள் வேமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

80 அடியை நெருங்கியது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 46,210 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளது.

நீர் இருப்பு 41.41 டிஎம்சி
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 41.41 டி.எம்.சியாக உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக மட்டும் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

விரைவில் 100 அடியை எட்டும்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே அளவில் நீடித்தால் அடுத்த ஒருசில நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் தமிழக அரசு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications