முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை தாண்டியது... வெள்ள அபாய எச்சரிக்கை!!
கம்பம்: முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர் மட்டம் 141 அடியை தாண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அணையிலிருந்து 1400 கனஅடி நீரை திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அணையின் நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியுள்ளது.

விரைவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க அளவான 142 எடியை நீர்மட்டம் எட்டிவிடும். அண்மையில்தான் நாதன் தலைமையிலான உயர்மட்ட கண்காணிப்பு மூவர் குழு அணையை பார்வையிட்டது. அப்போது அணையின் பாதுகாப்பை அந்தக் குழு உறுதி செய்தது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், முல்லைப் பெரியாறு கரையோரம் உள்ள வெள்ளக்கடவு, அய்யப்பன் கோவில் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக பாசனத்துக்காக 1400 கனஅடி தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அணையின் அருகே உள்ள












Click it and Unblock the Notifications