வேலை நிறுத்தம் எதிரொலி- குடிநீர் கேன் விலை ரூ.100 உயரும் அபாயம்!
சென்னை: குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால் கேன் தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் விலையும் 100 ரூபாய்க்கு மேல் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.
தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில், குடிநீர் நிறுவனங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டி, கேன் நிறுவனங்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் 857 நிறுவனங்கள் குடிநீர் தயாரிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், தண்ணீர் எடுக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி கேட்டல் உள்ளிட்ட காரணங்களுக்காக 252 நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்க முடியாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
இதனைத் கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், அனுமதி கோரி விண்ணப்பித்த 252 கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்தது. இந்நிலையில், குடிநீர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை விலக்கக்கோரியும், விதிகளை தளர்த்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் கடந்த மே மாதம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது ஒரு கேன் 100 ரூபாய் அளவிற்கு விற்பனையானது போன்ற நிலை ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications