பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலார் அணைகள் நாளை திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி மற்றும் மறை முக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications