அவிங்களாத்தான் எங்களைத் தேடி வர்றாங்க.. நாங்க போகவில்லை.. தேமுதிக சொல்கிறது!
ஈரோடு: நாங்கள் கூட்டணிக்காக யாரையும் அணுகவில்லை. அவர்களாகத்தான் வருகிறார்கள், நாங்கள் பேரமும் பேசவில்லை என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ், பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பலமுறைகளில் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் யாருக்கும் இதுவரை வெற்றி கிட்டவில்லை.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவும் இந்த ரேஸில் இருந்தது. இந்த முறை அது விலகி விட்டது. தன்னைத் தேடி வரும் அத்தனை கட்சிகளிடமும் பாரபட்சமின்றி தேமுதிக பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.

பேரம் பேசவில்லை
ஆனால் இதை அக்கட்சியின் கொபசெ வி.சி.சந்திரகுமார் மறுத்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

நாங்களாக போகவில்லையே
மேலும் அவர் கூறுகையில், தேமுதிக யாருடனும் தானாகச் சென்று இதுவரை பேச்சு நடத்தவில்லை. ஆனால் திமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேமுதிகவை தாமாகவே அணுகிப் பேச்சு நடத்தி வருகின்றன.

விஜயகாந்த் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவர்
யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் விஜயகாந்த் அறிவிப்பார். விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்.

எல்லோரும் எங்களை விரும்புகிறார்கள்
அனைத்துக் கட்சிகளும் விரும்பும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணிக்காக தேமுதிக பேரம் நடத்துகிறது என்பது தவறான தகவல் என்றார் சந்திரகுமார்.












Click it and Unblock the Notifications