செவ்வாய்: உலகம் பட்ட பாட்டைப் பார்க்கும்போது ... நாம எவ்வளவோ பெட்டர் போலிருக்கே....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளில் பல காலமாகவே ஈடுபட்டு வருகின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே வெற்றியை சுவைத்துள்ளன.

ஆனால் இந்த வெற்றிக்கு முன்னர் அவை பட்ட பாடு இருக்கே, பெரும்பாடாகும். அந்த வகையில் நாம் ரொம்ப சவுகரியமாக செவ்வாய்க்குப் போய் விட்டோம்.

நமது செவ்வாய் பயணம் சொகுசாக அமைந்ததற்கு முக்கியக் காரணம் - அடிப்படை ஆர் அன்ட் டி அதாவது பூர்வாங்க ஆய்வுகள் மற்றும் முயற்சிகளை நாம் பிறரின் தோல்வியிலிருந்து எடுத்துக் கொண்டதே. அதாவது யாரெல்லாம் என்னெல்லாம் தவறு செய்தார்களோ அதையெல்லாம் முழுமையாக தவிர்த்து விட்டு பாசிட்டிவான விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால்தான் நமது செவ்வாய் பயணம் சிக்கல் இல்லாமல் போய் விட்டது.

அதற்காக நமது விஞ்ஞானிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டு விட முடியாது. நிச்சயம், நமது விஞ்ஞானிகளின் கடும் உழைப்பும், புத்திசாலித்தனமும், துல்லியமான கணிப்புகளும்தான் நமது முதல் முயற்சியை வெற்றிகரமாக்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

சரி உலக நாடுகள் இதற்கு முன்பு பட்ட கஷ்டங்களைப் பார்ப்போமா...

50 ஆண்டு காலப் போராட்டம்

50 ஆண்டு காலப் போராட்டம்

அமெரிக்காதான் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தனது விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாகும். அந்த பெருமையைப் பெற்றது அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலமாகும். கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது செவ்வாயில் தரையிறங்கியது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் அமெரிக்காவின் 50 ஆண்டு கால அறிவியல் போராட்டமும், ஆய்வுகளும் வியர்த்து விறுவிறுத்துப் போய் நிற்கின்றன.

ஆய்வில் சில நாடுகள்

ஆய்வில் சில நாடுகள்

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள்தான் தீவிரமாக உள்ளன. தற்போது அதில் இந்தியாவும் முக்கிய நாடாக இணைந்துள்ளது. இதுதவிர ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பும் செவ்வாய் ஆராய்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

முதல் முயற்சி 1962ல்

முதல் முயற்சி 1962ல்

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பபப்ட்ட முதல் விண்கலம் சோவியத் யூனியனின் ஸ்புட்னிக் 24 ஆகும். இதைத் தொடர்ந்து 1971ல் மார்ஸ் 2 ஆர்பிட்டரை அமெரிக்கா அனுப்பியது. பின்னர் 75ல் வைகிங் 1 மற்றும் 2 ஆகியவை அனுப்பப்பட்டன. 2003ல் ஐரோப்பிய யூனியன் சார்பில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் அனுப்பப்பட்டது. அதே ஆண்டில் அமெரிக்கா மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்டை அனுப்பியது. 2011ல் கியூரியாசிட்டி செவ்வாயில் தரையிறங்கியது.

அடுத்தடுத்து அடி வாங்கிய ரஷ்யா

அடுத்தடுத்து அடி வாங்கிய ரஷ்யா

ரஷ்யாதான் செவ்வாய் கிரக ஆய்வில் பல தோல்விகளைச் சந்தித்த நாடாகும். இது செவ்வாய் ஆய்வுக்காக அனுப்பிய விண்கலங்களில் 16 விண்கலங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன. கடைசியாக அது அனுப்பிய விண்கலம் - போபாஸ் கிரண்ட் மிஷன். அது தோல்வியில் முடிந்தது.

சீனாவும் தோல்வி

சீனாவும் தோல்வி

இதேபோல சீனாவும் தனது யிங்குகோ 1 என்ற விண்கலத்தை அனுப்பி தோல்வியைத் தழுவியது. ரஷ்யாவின் உதவியுடன் அனுப்பப்பட்டது இந்த விண்கலம் என்பது முக்கியமானது. சுயமாகக் கூட அனுப்ப முடியவில்லை சீனாவால்.

இந்தியாவின் 3 ஆண்டு சாதனை

இந்தியாவின் 3 ஆண்டு சாதனை

இந்த கஷ்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியா 3 ஆண்டுகளில் தான் நினைத்ததை சாதித்துள்ளது பெரிய விஷயம்தான். சுற்றுப் பாதை வரைக்கும்தான் நாம் போயுள்ளோம் என்றாலும் கூட இதுவே மிகப் பெரிய சாதனைதான். நம்மை விட பல விஷயங்களில் பல மடங்கு பலத்துடன் காணப்படும் சீனா, ரஷ்யா, ஜப்பானால் கூட சாதிக்க முடியாததை நாம் சாதித்துள்ளதே பெரிய சாதனைதானே....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+