கிங்கோ, கிங் மேக்கரோ.. விஜயகாந்த்துடன் கூட்டணி தொடர்கிறது.. சொல்கிறார் பொன். ராதா!
சென்னை: கிங்கா, கிங்மேக்கரா என்று தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடம் கருத்து கேட்டது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிற கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜக பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், டாக்டர் ஜெமிலா, கிருஷ்ணகுமார், தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கிங்கா, கிங்மேக்கரா என்று தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடம் கருத்து கேட்டது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
விஜயகாந்துடனான பாஜக கூட்டணி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக மட்டும் இன்னும் விருப்ப மனுக்கள் வாங்காமல் உள்ளதே என்று கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம். அதை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி சட்டசபை தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகம் தான் என்றார்.












Click it and Unblock the Notifications