தேர்தலில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டுட்டோம்: கனிமொழி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக நூலிழையில் வெற்றியை தவறவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என திமுகவினர் பெரிதும் நம்பினர். ஆனால் அவர்களின் நம்பிக்கை வீணானது. அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அதிமுக 134 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் திமுக நூலிழையில் வெற்றியை தவறவிட்டுவிட்டது. அதிமுகவின் வெற்றியை மிகப் பெரிய வெற்றி என்று கூற முடியாது. கடந்த முறை தான் ஜனநாயக முறைப்படி செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
இம்முறை வலுவான எதிர்க்கட்சியாகியுள்ளதால் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications