'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி': வைகோ பேச்சு
சென்னை: 'நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்' என, மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வைகோ பேசியது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில்,"லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க எனக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது' என, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்தார்.

மதிமுகவுக்கு பரிட்சை
தேர்தல் கூட்டணி குறித்து, நீங்கள் யூகிக்கும் கட்சிளுடன் தான் அமையும். இந்த லோக்சபா தேர்தல் ம.தி.மு.க.,வுக்கு ஒரு பரீட்சை தான்.
2016ல் ஆட்சி
நமது இலக்கு, 2016ல் ஆட்சியை பிடிப்பது தான். அதில் நாம் வெற்றி பெறுவோம். தமிழருவி மணியன் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.
வாகனப் பிரச்சாரம்
இம்மாதம், 30ம் தேதி, அடுத்த மாதம், 1ம் தேதி தூத்துக்குடியில் வாகன பிரசாரத்தை நடத்துகிறேன். ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், 50 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அக்குழுவினர், தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலின் பெயர்களை சரிபார்க்க வேண்டும்.
எந்தெந்த தொகுதிகள்
எந்தெந்த தொகுதிகளில் ம.தி.மு.க., போட்டியிடும் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை;அந்தந்த மாவட்ட செயலர்களிடம் இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன்.
யூகிக்கும் கட்சியுடன்
எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.
லோக்சபா தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன். நீங்களும் தயாராகுங்கள். நீங்கள் யூகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் இவ்வாறு, வைகோ பேசினார்.
மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்தில் மாவட்டச் செயலர்களை பேச அனுமதிக்கவில்லை. கட்சியின் பொதுச்செயலர் வைகோ மட்டுமே பேசினார். இதனால், கட்சியின் பலம், பலவீனம் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள், உட்கட்சி பிரச்னை, மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பிரச்னை, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த கருத்துக்களை, மாவட்டச் செயலர்கள் சுதந்திரமாக தெரிவிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications