மத்திய அரசை எதிர்ப்பதை விட காரியத்தை சாதிப்பது தான் முக்கியம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மத்திய அரசை எதிர்ப்பது நோக்கமல்ல; தமிழர்களுக்கான காரியத்தை சாதிப்பதே முக்கியம் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை : மத்திய அரசைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல ; தமிழர்களுக்கான காரியத்தைச் சாதிப்பது தான் முக்கியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பில் சொல்லியுள்ளது போன்று, காவிரி மேலாண்மை வாரியத்தை கொடுக்கப்பட்ட ஆறு வார கால அவகாசத்திற்குள் மத்திய அரசு அமைக்கவில்லை.

இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையாததற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராததே காரணம் என்றும், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டனர் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மதுரையில் பேசிய தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசு நிச்சயம் காவிரியில் தமிழருக்கான உரிமையைப் பெற்றுத்தரும் என்றும், எந்த இடத்திலும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்களை நடக்கவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.சியு.,வில் இருந்த கட்சியை எழுந்து ஒலிம்பிக்கில் ஓட வைத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எனவே, தமிழர்களுக்கான உரிமையை நிச்சயம் அவர் மீட்டுத்தருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றவர்களைப் போல கண் மூடித்தனமாக மத்தி அரசை எதிர்ப்பது தங்கள் நோக்கம் இல்லை என்றும், தமிழர்களுக்கான காரியத்தைச் சாதிப்பது மட்டும் தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications