சிபிஐ விசாரித்து உத்தரவிடாமல் என் மகன் உடலை வாங்கமாட்டேன் - ராம்குமார் தந்தை
திருநெல்வேலி: எனது மகனின் உடம்பை சிபிஐ விசாரித்து, உத்தரவு இடாமல் வாங்க மாட்டோம். சதி திட்டம் போட்டு எனது மகனை கொன்று விட்டனர். நாளை ஜாமீன் கிடைக்கும் என்ற நிலையில் இன்று சதி செய்து கொன்று விட்டனர் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் இன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை தரப்பு கூறுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் ராம்ராஜூம், உறவினர்களும் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து மீனாட்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரின் தந்தை பரமசிவம், ''நானும், எனது மனைவியும் என் மகன் ராம்குமாரை சந்திக்க சென்று இருந்தோம். போலீஸ் அதிகாரி முன்புதான் அவனை சந்தித்து முக்கால் மணி நேரம் பேசினோம். எங்களை பார்த்தவுடன்அழுதான். ஆனால், அவன் நல்ல மன நிலையில் இருந்தான். உடலும் ஆரோக்கியமாகத் தான் இருந்தது.
நாளை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நிலையில், சதி செய்து அவனை கொண்டு விட்டனர். நாங்கள் சிபிஐ விசாரணை நடத்தி, உத்தரவு வந்த பின்னர்தான், ராம்குமார் உடலை வாங்குவோம். நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளோம். நாங்கள் சென்னை செல்லவில்லை. எங்கள் சார்பில் சிலர் சென்று உள்ளனர். நாங்கள் பின்னர்தான் முடிவு செய்வோம்என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications