வெயில் தாக்கம்: குழந்தைகள், பெரியவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கோடைக்கால நோயிலிருந்து காத்துக் கொள்ள வெயிலில் வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வெயில் கொளுத்தும் வேளையில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.,
வெயில் தாக்கத்தால் ஏற்படும் அம்மை நோய்களை தடுக்க சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்படுகிறது என்றும் அம்மை நோய் வராமல் தடுக்க இருவேளை குளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications