மழைக் காலத்தில் கல்யாணம் வச்சா.. "ரெய்ன்" வராம "ரெய்னா"வா வருவாரு...!

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: திருப்பூரில் மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் கல்யாணம் செய்து வைத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சங்கரெண்டாம் பாளையம், தாளக்கரை, எரிசனம்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். விவசாயத்துக்கு மழை மற்றும் கிணற்று நீரையே இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.

Weird marriage in Tirupur…

கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் இந்த கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 7 கிராம மக்களும் ஒன்று கூடி மழை பெய்ய வருண பகவானுக்கு வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி எரிசனாம்பாளையம் தலைவர் முத்துச்சாமி தலைமையில் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு 7 கிராம மக்களுக்கும் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. சங்கரெண்டாம் பாளையம் பட்டக்காரர் பாலசுப்ரமணிய பெரியண்ண உடையார் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தார்.

அதன்பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க 2 புரோகிதர்கள் மந்திரம் முழங்க அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் விருந்து நடைபெற்றது.

திருமணம் முடிந்த 1 மணி நேரத்துக்குள் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இது 7 கிராம மக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

மழைக் காலத்தில் கல்யாணத்தை வச்சா.. "ரெய்ன்" வராம "ரெய்னா"வா வருவாரு...நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+