கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பர ஷூட்டிங்.. கடனில் மூழ்கும் தயாரிப்பாளர்கள்.. சினிமாவின் சாபக்கேடுகள்!
Recommended Video

சென்னை: கோடம்பாக்கமாக இருந்தபோது சினிமா தொழில் கண்ட வளர்ச்சி.. பெற்ற லாபம் இவையெல்லாம்... கோலிவுட் என அழைக்கப்பட்டதிலிருந்து தொய்வைச் சந்தித்து வருகிறது என்பதுதான் எதார்த்தம். இதற்கு முக்கியமாக சொல்லப்படுவது உச்சமாகியிருக்கும் நாயகர்கள், நாயகிகளின் சம்பளம்.
தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி, சினிமாத்துறையின் எதார்த்தத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் வெறும் 10 %பேர்தான், மீதமுள்ளவர்கள் தினசரி வாழ்க்கையுடன் போராடவேண்டியுள்ளது என்றார் பிரகாஷ் ராஜ்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்க, சில உச்ச நட்சத்திரங்களின் சம்பளமே காரணம் என்று வெளிப்படையாக பேசிய அவர், மாற்றத்தை நம் வீட்டிலிருந்து துவங்குவோம் என்று சொன்னார். அரசு சினிமாத்துறையை சீர்படுத்தவேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார்.

தயாரிப்பாளர்களின் சாபக்கேடு
ஹுரோ, ஹுரோயின்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பர ஷூட்டிங் என்று காலம் காலமாக பல சாபக்கேடுகளைக் கடந்து தான் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை வெளியிட்டு வருகின்றன. பல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பரமான ஷூட்டிங் என்று ஆற்றில் விட்ட காலை சேற்றில் விட முடியாமல் கடன்படுவது காலம் காலமாக சினிமாத் துறைக்கு சாபக்கேடான விஷயமாக இருந்து வருகிறது.

தயங்கும் தயாரிப்பு நிறுவனங்கள்
தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக, தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் நடிகர்கள் வடிவேலு, சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நடிகர்கள் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வெற்றி பெருவதே குதிரைக்கொம்பாக இருக்கும் நிலையில், பணத்தை வாரி இறைத்து படம் எடுக்க பலரும் தயக்கம்காட்டுகிறார்கள்.

கடனில் சிக்கும் நிறுவனங்கள்
அதனால், நல்ல வலுவான கதையை தேர்வு செய்து, கதையை நம்பி முதலீடு செய்வது சமீப காலமாக தமிழ் திரையுலகில் அதிகரித்துவருகிறது. எனினும் சில தவிர்க்க முடியாத சூழலில் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் எப்படியாவது கடன்பட்டு படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று கந்தவட்டிக் கொடுமையில் சிக்கிக் கொள்கின்றனர். பட்டகடனுக்காக தன்னுடைய வீட்டையே விற்றுவிட்டதாக கொந்தளிக்கிறார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

சம்பளத்தை குறைத்தால் மட்டும் போதுமா?
ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்கிறார்கள் இன்னோரு தரப்பினர். இவர்களுக்காக காத்திருக்காமல், கதைக்கு ஏற்றவர்களை இனம்கண்டு படத்தை முடிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனம் என்கிறார் வளர்ந்துவரும் இளம் இயக்குநர் ஒருவர்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications