ஜல்லிக்கட்டின் நாயகனே: ட்விட்டரில் பொன்னாரை கொண்டாடும் தமிழர்கள்
சென்னை: தமிழர்கள் உள்பட பலரும் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் பலரும் ட்விட்டரில் ஜல்லிக்கட்டு பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ட்விட்டரில் #jallikattu என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
பொன்னார்
ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க காரணமாக இருந்த பொன்னாரை வாழ்த்தி சூர்யா ட்வீட் போட்டுள்ளார்.
|
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி அது கலாச்சார சம்பிரதாயம் ஆகும் என்கிறார் சுரேஷ்.
|
தடை நீக்கம்
ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்று எடிட்டர் சுரேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சந்தோஷம்
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதை நினைத்து தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் சத்யா.
|
ஜெயலலிதா
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட பெரும் முயற்சி செய்த ஜெயலலிதா மற்றும் பொன்னாருக்கு தான் இந்த பெருமை சேரும் என்கிறார் பரதன்.












Click it and Unblock the Notifications