ரஜினி 1996ல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிக ஓட்டு கிடைச்சிருக்காது.. ஏன் தெரியுமா?
ரஜினி 1996-இல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிகமாக வாக்குகள் கிடைத்திருக்காது என்று ஒரு ரசிகர் கூறுகிறார்.
Recommended Video

சென்னை : ரஜினி 1996-இல் கட்சி ஆரம்பித்திருந்தால் கூட இப்போ மாதிரி அதிக ஓட்டு கிடைத்திருக்காது என்று கூறிய ரசிகரிடம் ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் சிரிப்பை வரவழைத்தது.
கடந்த 1991-96-இல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் செய்து வைத்த ஆடம்பர திருமணத்தால் தமிழகமே அதிருப்தியில் இருந்தது. காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தது.

அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பத்திரிகை நண்பர்களும், ரசிகர்களும் அவரை அழைத்தனர். ஆனால் அவரோ திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இவரை வரசொன்னால் வாய்ஸ் மட்டும் கொடுக்கிறாரே என்று அனைத்து தரப்பினரும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக ரஜினி கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்!
— SKP Karuna (@skpkaruna) December 31, 2017
அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்திலாம் ஓட்டுப் போடுவாங்கன்னு.. 👌👌
இதுகுறித்து ரசிகர்களின் உற்சாக பேட்டியில் சுவாரஸ்மான ஒன்று அடையாளம் காணப்பட்டது. அதை டுவிட்டர்வாசி ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் , ரஜினி ரசிகர்களின் உற்சாகப் பேட்டிகள் செம சுவாரஸ்யம்! அதுலே ஒருத்தர் சொல்றாரு! அப்போ தலைவர் கட்சி ஆரம்பிச்சிருந்தா நான் மட்டும்தான் ஓட்டுப் போட்டிருப்பேன்! இப்போ ஆரம்பிக்கிறதாலே என் பேரன், பேத்திலாம் ஓட்டுப் போடுவாங்கன்னு.. என்று ரசிகர் தெரிவித்ததாக இந்த டிவிட்டர்வாசி தெரிவித்துள்ளார்.
இதை படிக்கும் போது ரசிகர்களின் லாஜிக்கோ லாஜிக் என்று சிரிப்புதான் வருகிறது.












Click it and Unblock the Notifications