சினேகாவுக்கு வந்த திடீர் காதல்.. இளைஞருடன் ஒரே ஓட்டம்.. கடைசியில் வயல்வெளியில் அலறிய மாமனார்..!
முன்விரோதம் காரணமாக மாமனாரை அடித்து கொன்றார் மாப்பிள்ளை
ராணிப்பேட்டை: ஒரு வருடத்திற்கு முன் காதலனுடன் மகள் ஓடிச்சென்ற விவகாரம் புகைந்து கொண்டே வந்த நிலையில், திடீரென ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது..!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன்.. இவர் ஒரு விவசாயி.. 45 வயதாகிறது.. திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்...
மூத்த மகள்தான் சினேகா.. இவருக்கு மாப்பிள்ளை ஒருவரை பார்த்து, அப்பா சசிதரன் முடிவு செய்து வைத்திருந்தார்.. ஆனால், சினேகாவுக்கு பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது..

குழந்தை
இதனால், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பக்கத்து பக்கத்து கிராமத்திலேயே இருந்தாலும், அப்பாவை சந்திக்க சினேகா போவதில்லை.. இவர்களுக்கு கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் பொதுவாக உள்ளது.. அதனால், அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது...

வாக்குவாதம்
அந்த வகையில், இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச வந்த சசிதரன் சென்று கொண்டிருந்தார்.. அந்த வழியாக மருமகன் விக்னேஷும் வந்தார்.. நேருக்கு நேர் சந்தித்து கொண்டபோது மறுபடியும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு வந்து மாமனாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விவசாய பகுதியில் போராடினார் சசிதரன்.. அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சசிதரன் இறந்துவிட்டார்.

வழக்கு பதிவு
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.. மேலும் சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.. காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருமகனே மாமனாரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications