Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினேகாவுக்கு வந்த திடீர் காதல்.. இளைஞருடன் ஒரே ஓட்டம்.. கடைசியில் வயல்வெளியில் அலறிய மாமனார்..!

முன்விரோதம் காரணமாக மாமனாரை அடித்து கொன்றார் மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ஒரு வருடத்திற்கு முன் காதலனுடன் மகள் ஓடிச்சென்ற விவகாரம் புகைந்து கொண்டே வந்த நிலையில், திடீரென ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது..!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன்.. இவர் ஒரு விவசாயி.. 45 வயதாகிறது.. திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்...

மூத்த மகள்தான் சினேகா.. இவருக்கு மாப்பிள்ளை ஒருவரை பார்த்து, அப்பா சசிதரன் முடிவு செய்து வைத்திருந்தார்.. ஆனால், சினேகாவுக்கு பக்கத்து ஊரான கீராம்பாடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது..

குழந்தை

குழந்தை

இதனால், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பக்கத்து பக்கத்து கிராமத்திலேயே இருந்தாலும், அப்பாவை சந்திக்க சினேகா போவதில்லை.. இவர்களுக்கு கீழம்பாடி பகுதியில் 13 ஏக்கர் விவசாய நிலம் பொதுவாக உள்ளது.. அதனால், அடிக்கடி அப்பகுதிக்கு வந்து செல்லும்போது இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது...

வாக்குவாதம்

வாக்குவாதம்

அந்த வகையில், இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச வந்த சசிதரன் சென்று கொண்டிருந்தார்.. அந்த வழியாக மருமகன் விக்னேஷும் வந்தார்.. நேருக்கு நேர் சந்தித்து கொண்டபோது மறுபடியும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை

கொலை

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், அவருக்கு அண்ணன் தம்பி முறை உடைய மூன்று நபர்களுடன் கடப்பாறை மற்றும் கத்தியை கொண்டு வந்து மாமனாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விவசாய பகுதியில் போராடினார் சசிதரன்.. அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சசிதரன் இறந்துவிட்டார்.

 வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் பசுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.. மேலும் சௌந்தர்ராஜன் லோகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.. காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மருமகனே மாமனாரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+