ஜெயலலிதா உடல்நிலை பாதிப்புக்கு காரணமான செப்சிஸ் என்றால் என்ன?
ஜெயலலிதா உடல்நிலை பாதிப்புக்குக் காரணமான செப்சிஸ் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புக்குக் காரணமான செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா என்பது ரத்தத்தில் கலக்கும் பாக்டீரியா கிருமி தொற்றாகும்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தேறிவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

ஆனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள், சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் செப்சிஸ் தொற்று தாக்கத்தால் ஜெயலலிதாவின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் உடல்நலம் தீவிரமாக தேறி வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது எனவும் அவர்கள் விளக்கம் தந்தனர்.
செப்சிஸ் நோய் தொற்று தாக்கம் என்பது என்ன?
- பாக்டீரியா கிருமி தொற்றில் மிகவும் ஆபத்தானது செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியா.
- இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலக்கும் போது அதிகளவில் பெருகும்
- ரத்தத்தில் அதிகமாகும் நிலையில் உடலில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் அழுத்தம் குறையும்.
- செப்சிஸ் அல்லது செப்டிசீமியா சிறுநீரகப் பாதை, நுரையீரல் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- இந்த பாக்டீரியாவை அழிக்க ஆன்டிபயாடிக் மருந்து தரப்படும்.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கையில் ஊசி மூலம் திரவங்கள், மருந்துகள் செலுத்தப்படும்.
- மூச்சு திணறலைத் தவிர்க்க வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.
- செப்சிஸ் எனப்படும் செப்டிசீமியாவின் தொடக்க அறிகுறி கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல்.












Click it and Unblock the Notifications