நாங்களே அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவோம்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வார்னிங்
திருவாரூர்: விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளித்து காவிரி பிரச்சனை தொடர்பாக இனியாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; இல்லையேல் நாங்களே அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஒழுங்குமுறை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு கைதாகினர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் போராட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் பிறகாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.
அதில் காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆக்க பூர்வமான முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். இதனை தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழக அரசு அப்படி செய்யவில்லை என்றால் நாங்களே விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவுகளை எடுப்போம். அதன் அடிப்படையில் ஒரு தூதுக் குழுவை அமைத்து பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்போம்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications