கல்யாண பத்திரிக்கையை காது குத்துக்கு கொடுத்த தபால்துறை... நெல்லை வியாபாரி அதிர்ச்சி
நெல்லை: நண்பரின் திருமண பத்திரிக்கையை 2 மாதங்கள் கழித்து டெலிவரி செய்துள்ளது தபால்துறை. கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பியதை காது குத்துக்கு கொடுத்த சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வேல்முருகன். அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் வினோத் ராம் பிரசாத். திருவாரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 26ஆம்தேதி தனது திருமணத்தை முன்னிட்டு வினோத் கள்ளக்குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள நண்பர் வேல் முருகனுக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். ஆனால் தபால் வநது சேரவில்லை.
இரண்டு மாதங்கள் கழித்து மாலையில் வேல்முருகனுக்கு திருணம அழைப்பிதழ் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பிய அழைப்பிதழ் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததால் வேல்முருகன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள எனது நண்பருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம நடந்துள்ளது. ஆனால் திருமண அழைப்பிதழோ இப்போதுதான் கிடைத்துள்ளது. அநத திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை.
இதுபோல் இன்டர்வியூ கார்டுகள், மாணவர்களுக்கான அட்மிஷன் கார்டுகள் ஆகியவை தாமதமாக கிடைத்ததால் அவர்கள் என்ன செய்வார்கள், இதனால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படும். இதுகுறித்து பாளை தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகளை பார்த்து முறையிட உள்ளேன் என்று அவர் காட்டமாக தெரிவித்தார். தபால் துறையின் இந்த மோசமான செயல்பாட்டால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications