பீப் சவுண்ட் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்.. சென்னை போலீசை ஸ்டன்னாக்கிய யூடியூப் கேள்வி!
சென்னை: பீப் ஒலிக்குள் மறைக்கப்பட்டுள்ளது என்ன வார்த்தை என்று யூடியூப் சார்பில் சென்னை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், விளக்கம் கொடுத்த பிறகும் பாடல் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.
யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட பீப் பாடல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமனறத்தில் சிம்பு கோரிய முன் ஜாமீன் அளிக்கப்படாததால், அம்மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையில் தொடர்புடைய சிம்பு, அனிருத் இருவரும் ஜனவரி 5ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

யூடியூப்பிடம் கோரிக்கை
வெகுஜன மக்களுக்கு சென்று சேர்ந்துவிட கூடாது என்பதால், இணையதளத்தில் இருந்து பீப் பாடலை அகற்றுமாறு யூ டியுப் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

தர்மசங்கட கேள்வி
இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் கோரிக்கையை பரிசீலித்த யூடியூப் நிர்வாகம், பீப் ஒலி போடப்பட்டுள்ள இடத்தில் வருவது என்ன வார்த்தை என விளக்கம் கேட்டது. அதனை எப்படி விளக்க என்று தெரியாமல், கொஞ்சம் சங்கடப்பட்டோம். இருப்பினும் அந்த வார்த்தையை கூறினோம்.

நீக்கவில்லை
தமிழ் சமூக சூழ்நிலையில் அந்த வார்த்தை மிகவும் மோசமானது என கூறினோம். ஆயினும் யூடியூப் இதுவரை அப்பாடலை நீக்கவில்லை. இருமுறை கடிதம் எழுதியும், இன்னும் பலன் கிடைக்கவில்லை.

அதெல்லாம் சகஜமப்பா
நாங்கள் கூறிய அந்த கெட்டவார்த்தை போன்ற வார்த்தைகள் ஆங்கிலத்தில் மிக சகஜம் என்பதால் எங்களது கோரிக்கைக்கு இதுவரை யூடியுப் தரப்பில் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை என்று தெரிகிறது. தமிழ் பண்பாட்டு வீச்சை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை" என்றார்.

பதிவேற்றியவரும் தெரியவில்லை
மற்றொரு அதிகாரி கூறுகையில், டிசம்பர் 11ம் தேதி யூடியூப்பில் அந்த பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த ஐ.பி. அட்ரசில் இருந்து இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று யூடியூப்பிடம் விளக்கம் கேட்டதற்கும், இன்னும் பதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டில் பதிவேற்றமாகியிருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications