அப்படியா.. நிஜமா.. உண்மையாகவா...?
சென்னை: வாட்ஸ் ஆப்பில் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது. உண்மையா பொய்யா என்றுதான் தெரியவில்லை.
அந்த செய்தி இதுதான்:

ஆர். கே. நகர் மக்கள் ஏமாற்றம் - இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நிற்பதால் தங்களுக்கு, ஒட்டுக்கு பணம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தனர் ஆர்.கே.நகர் மக்கள். பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.கவினரும் வீடு, வீடாக செல்லும் போது, ஒட்டு போட்டிங்கன்னா பணம் கொடுப்போம் என்று கூறி, அலைபேசி எண்ணையும் பெற்று சென்றதாக தெரிகிறது.
ஆனால் இதுவரை கட்சி தலைமையிலிருந்து பணம் வராதததால், அ.தி.மு.கவினரை ஆர்.கே.நகர் மக்கள் நச்சரித்து வருவதால் பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர்கள், மக்களிடம் ஏதும் பேச முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக தவகல்கள் கூறுகினறன.
பணம் கொடுக்கவில்லை என்றால் மக்களை எதிர் நோக்குவது கடினம் என்று அ.தி.மு.கவினர் புலம்பி வருவதாகவும் தகவல் என்று அந்த செய்தி கூறுகிறது.
இடைத் தேர்தலில் பணம் வாரியிறைக்கப்படுதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ஒரு பைசா கூட போகவில்லை என்று இப்படி ஒரு செய்தியை வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டவங்க.. ஒரு வேளை "அவங்களா" இருக்குமோ...!?












Click it and Unblock the Notifications