நீட் வெற்றி என்று குதூகலித்த தமிழிசை.. மாணவனின் தந்தை மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
நீட் வெற்றி என்று குதூகலித்துள்ள தமிழிசை, எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு முறை வெற்றி என்று குதூகலமாக கூறிய தமிழிசை தற்போது செயற்கையாக நடந்த மாணவனின் தந்தையின் மரணத்துக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு சேரும் வகையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 2-ஆவது முறையாக தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு தமிழகத்திலும், 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிற மாநிலங்களிலும் தேர்வு மைய்ம ஒதுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் இன்னல்களுக்கு மத்தியில் இன்று தேர்வு எழுத சென்றுள்ளனர்.

மொழி பிரச்சினை
பெரும்பாலான தமிழக மாணவர்களின் பெற்றோர் வெளிமாநிலங்களில் மொழி தெரியாமல், இருக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

தந்தை மரணம்
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகனை அழைத்து கொண்டு எர்ணாகுளத்துக்கு சென்றார். அங்கு மகனை தேர்வு மையத்துக்கு அனுப்பிவிட்டு விடுதிக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

குதூகலமான டுவீட்
நீட் தேர்வு எழுதும் முறைக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக டுவிட்டரில் தமிழிசை குதூகலமாக தெரிவித்தார். மேலும் மெரிட்டில் தேர்வு எழுதி லட்சங்கள், கோடி என செலவு செய்யாமல் மருத்துவராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நீட் தேர்வுக்கு வெளிமாநிலங்கள் மையங்கள் ஒதுக்கியது குறித்து நேற்று செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் தமிழிசை வாக்குவாதம் செய்தார்.

செயற்கையான மரணம்
தற்போது மன அழுத்தம், அலைச்சல் காரணமாக எர்ணாகுளத்தில் மாணவனின் தந்தை மரணமடைந்துள்ளார். இதற்கு யார் பொறுப்பேற்பது. இதுபோன்ற கொடுமைகளை அரங்கேற்றி செயற்கையான முறையில் மரணத்தை ஏற்படுத்தியவர்கள் யார்.. இப்போதும் நீட் வெற்றி என்று முழக்கமிடப் போகிறாரா தமிழிசை.. நீட் தேர்வுக்காக வாக்காலத்து வாங்கிய ஒவ்வொருவரும் வெட்கித் தலை குணிய வேண்டாமா..
நீட் தேர்வின் அத்தனை அக்கிரமங்களுக்கும் சப்பைக் கட்டு கட்டும் தமிழிசை போன்றவர்கள் இந்த துயரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications