பால் வாங்க போன பாட்டி.. குழந்தைகளுடன் மாயமான கள்ளக்குறிச்சி சரண்யா... கடைசியில் ட்விஸ்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பால் வாங்கி வருவதற்காக பாட்டி கடைக்கு போன போது , வீட்டில் இருந்த பெண், தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தை சேர்ந்த 29 வயதாகும் தேவேந்திரன் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வடதொரசலூர் கிராமத்தை சே்ாந்த 23 வயதாகும் சரண்யாவுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் தமிழ் யாழினி என்ற மகளும், ஒரு வயதில் ஜாஜித் என்ற மகனும் இருந்தார்கள்

பொங்கல் அன்று சரண்யாவுக்கும், தேவேந்திரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்தகராறு கடும் சண்டையாக மாறியதால், கோபித்துக் கொண்ட சரண்யா, கணவர் வீட்டில் இருந்துது தனது குழந்தைகளுடன் வடதொரசலூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார்.
குழந்தைகளுடன் அம்மாவிற்கு சரண்யா வந்த போது, வீட்டில் அவருடைய பாட்டி சின்னபொண்ணு மட்டும் இருந்திருக்கிறார். தொடர்ந்து சின்னபொண்ணு பால் வாங்கி வருவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சரண்யாவையும் அவருடைய குழந்தைளும் மாயமாகினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னப்பொண்ணு கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சரண்யாவையும் அவருடைய குழந்தைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே இருந்த விவசாய கிணற்றுக்கு வெளியே சரண்யாவின் துப்பட்டா இருந்தது.
இதைப்பார்த்து திடுக்கிட்ட அவர்கள், சரண்யா குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று நினைத்தனர். இது பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படட்து. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் நேற்று முன்தினம் மாலை முதல் ஈடுபட்டார்கள்.
நேற்று அதிகாலை 6 மணியளவில் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு பார்த்தபோது, குழந்தைகள் தமிழ் யாழினி மற்றும் ஜாஜித் ஆகியோர் இறந்து கிடந்தனர் இவர்களின் உடல்களை போலீசாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சரண்யாவை காணாததால் தொடர்ந்து அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் சரண்யா வடதொரசலூர் ஏரி பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற அவரது உறவினர்கள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி உள்ளார்கள்.
அப்போது சரண்யாவிடம் விசாரித்தபோது, எனக்கும் கணருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த தகராறில் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகி விடக்கூடாது என்று அவர்களையும் கொலை செய்ய எண்ணி இருவரையும் கிணற்றில் வீசி விட்டு நானும் உள்ளே குதித்துவிட்டேன். ஆனால் நீச்சல் தெரிந்ததால் என்னால் தண்ணீரில் மூழ்கமுடியவில்லை.
இதனால் வெளியே வந்த நான் மீண்டும் தற்கொலை செய்துகொள்வதற்காக அருகில் இருந்த உயர்அழுத்த கோபுர மின்கம்பத்தில் ஏறினேன். அப்போது மயக்கம் ஏற்பட்டதால் கீழே விழுந்து விட்டேன் என்றார். தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரண்யாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications