சுவாதியைக் கொல்ல பயன்படுத்திய அரிவாள் யாருடையது?.. புதுக் குழப்பம்!
சென்னை: சுவாதியைக் கொல்லப் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள் குறித்த குழப்பம் மேலும் கூடியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 3 விதமான தகவல்கள் பரவியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இளம் பெண் சுவாதியைக் கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போலீஸார் தன்னைக் கைது செய்ய முயன்றபோது பிளேடால் தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டதாக கூறி காயமடைந்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அறித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்னும் அவர் முழுமையாக வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் குறித்த புதுப் புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அந்த அரிவாள், ராம்குமாரின் உறவினருக்குச் சொந்தமானது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ள.

கர்நாடக அரிவாள்
கொலை நடந்த சில மணி நேரங்களில் இந்த அரிவாளை போலீஸார் கைப்பற்றியதாக கூறப்பட்டது. அப்போது போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த அரிவாள் கர்நாடக மாநிலத்தில் கூர்க் மாவட்டத்தில் பயன்படுத்துவதைப் போன்ற அரிவாள் என்று தகவல்கள் வெளியாகின.

மைசூர் - பெங்களூரு விரைந்த போலீஸ்
இதையடுத்து மைசூர், பெங்களூரு நகரங்களுக்குப் போலீஸ் படை விரைந்தது. சுவாதியும் சில காலம் பெங்களூரில் பணியாற்றியிருந்தார் என்பதால் இந்த வாதம் வலுப்பட்டது.

அவரே போய் வாங்கியதாக 2வது தகவல்
இந்த நிலையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர் இன்னொரு தகவல் வெளியானது. அதாவது சுவாதியைக் கொலை செய்ய முடிவு செய்த ராம்குமார் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து ஆடு தழை பறிக்க அரிவாள் தேவை என்று கூறி இந்த அரிவாளை வாங்கி வந்ததாக அவரது பெற்றோர் கூறியதாக போலீஸ் தரப்பில் சிலர் கூறியிருந்தனர்.

உறவினர் அரிவாளாம்
ஆனால் தற்போது இன்னொரு தகவல் வந்துள்ளது. அதாவது இந்த அரிவாள் ராம்குமார் உறவினர் ஒருவருடையதாம். அவரி்டமிருந்து ராம்குமார் இந்த அரிவாளை எடுத்து வைத்திருந்தாராம். இப்படிப் போகிறது அந்தத் தகவல்.

மீனாட்சிபுரத்தில் தீவிர விசாரணை
இந்த நிலையில் ராம்குமாரின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமாரின் குடும்பத்தினர் தவிர உறவினர்கள், கிராமத்தினரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications