தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி!
ஏலகிரி: சட்டசபை தேர்தல் பட்டுவாடாவுக்கான எஞ்சிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக பரவிய தகவலை நம்பியே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி பங்களாவில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடா நாடு எஸ்டேட் பங்களாவில் பல நூறு கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நம்பி 2017-ல் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார்.
இந்த கொலை, கொள்ளை முயற்சியில் பலர் சிக்கி சிறைக்கு போனாலும் இதன் பின்னணி குறித்த மர்மம் வெளியாகவில்லை. இப்போது இதே பாணியில்தான் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கொள்ளை முயற்சி
துரைமுருகன் உள்ளிட்டட அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஏலகிரி பங்களாவில் பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்கி இருந்தனர். இந்த நிலையில்தான் பங்களாவின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

சிசிடிவி ஹார்ட் டிஸ்க்
பங்களாவுக்குள் நுழைந்த கொள்ளையர்களுக்கு ஆடம்பரமான, விலை உயர்ந்த எந்த பொருளும் சிக்கவில்லை. அங்கிருந்த கட்டில் போன்ற பொருட்களால் கொள்ளை கும்பமல் ஏமாந்தது. ஆனால் தாங்கள் பிடிபடக் கூடாது என்பதற்காகவே சிசிடிவி காமிராவின் ஹார்ட் டிஸ்க்கை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

தேர்தல் பணம் பதுக்கலா?
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போதுதான், கடந்த சில நாட்களாக ஏலகிரி பகுதியில் ஒரு தகவல் தீயாக பரவியதாம். அதாவது தேர்தலின் போது துரைமுருகன் தரப்பு பணம் பட்டுவாடா செய்ய முடியாமல் எஞ்சிய பல நூறு கோடி ரூபாய் ரொக்கமாக இந்த பங்களாவில்தான் பதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த தகவல்.
Recommended Video

சிசிடிவி டார்கெட்
25 ஏக்கர் நிலத்துக்கு நடுவே ஆள் நடமாட்டமே இல்லாத பங்களா என்பதால் பணம் இருக்கலாம் என நம்பி கொள்ளை கும்பல் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஹார்ட் டிஸ்க்கை கழற்றி எடுத்துச் செல்லுகிற நபர்கள் எனில் இந்த பங்களாவை பற்றி நன்கு தெரிந்த நபர்களே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நன்கு தெரிந்த நபர்களா?
ஏற்கனவே கொடா நாடு எஸ்டேட் பங்களா கொலை கொள்ளையில் தொடர்புடையவர்கள், அங்கே பணிபுரிந்த சிலருடன் இணைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோலவே துரைமுருகன் பங்களாவிலும் நடந்திருக்கக் கூடுமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட்












Click it and Unblock the Notifications