ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார்.. பி.எச்.பாண்டியன் பரபர கேள்வி!
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களாக என்றும் அவர் வினவியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் இன்று பல்வேறு புதிய குண்டுகளை போட்டுள்ளனர்.

சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார்?
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன் மற்றும் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிஎச்.பாண்டியன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என அவர் கேள்வி எழுப்பினார்.

குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்களா?
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை யாருடைய அனுமதியுடன் அப்பல்லோ மருத்துவர்கள் நிறுத்தினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெ.கடுமையாக தாக்கப்பட்டார்
அவர் காயத்துடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பிஎச்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?
மேலும் ஜெயலலிதா எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எந்த நிலைமையில் என்று சேர்க்கப்பட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications