புதிய ரூபாய் நோட்டு விவகாரம்: பெங்களூரு சிறையில் கம்பி எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை!
புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை சந்திரகாந்த் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் சசிகலா அணியினர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிய விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் சந்திரகாந்த் பெங்களூரு சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:

சகலை சந்திரகாந்த்
பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுவது எடப்பாடி பழனிச்சாமியின் மகன் அல்ல. எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை சந்திரகாந்த் ராமலிங்கம்.

ஈரோடு ராமலிங்கம்
அதாவது புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடு முழுவதும் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஈரோட்டிலும் ஒப்பந்ததாரர் ராமலிங்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூருவிலும் சோதனை
ராமலிங்கத்தின் மகன் சந்திகாந்துக்கு சொந்தமான பெங்களூரு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் ரூ6 கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இந்த ராமலிங்கத்தின் மகன் சந்திரகாந்தும் எடப்பாடி பழனிச்சாமியின் மகனும் ஒரே வீட்டில் திருமணம் செய்துள்ளனர்.

ஸ்டாலின் கேள்வி
எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஈரோடு ராமலிங்கம் என்பதால் இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications