பாருங்களேன், தீபக் யாருன்னு கூட தெரியாம இவ்வளவு நாள் இருந்திருக்காரு தம்பித்துரை!?
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அதிமுகவில் உள்ளாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: தீபக் என்றால் யார் என்று அதிமுக எம்.பியும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக ஏற்றுகொள்ள முடியாது.ஓ.பன்னீர்செல்வம் 'அண்ணன்' 3 முறை முதல்வராக இருந்து இருக்கிறார். அவரே பொறுப்பு ஏற்கலாம். அவரே அதிமுகவை வழி நடத்தலாம். எங்களுக்குள் இருப்பது குடும்ப சண்டைதான் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தம்பிதுரை, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,அவரிடம் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, 'தீபக் என்றால் யார்? அவர் அ.தி.மு.க.வில் உள்ளாரா? அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறினார்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் தீபக் பற்றி கேட்டபோது, தீபக் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அவர் எப்படி எங்களை அழைக்கிறார் என்று திருப்பி கேட்டார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications