ஏன் மாட்டிறைச்சி விவகாரத்தில் எடப்பாடியார் வாய் திறக்கவில்லை? - மு.க. ஸ்டாலின் 'பொளேர்'- வீடியோ
மாட்டிறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடியார் ஏன் வாய் திரக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் இன்று திமுக நடத்திய போராட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மாட்டிறைட்ச்சி தடை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் எல்லாம் பசுவதை தடுப்பு சட்டத்து எதிராக போராங்கள் நடந்து வருகின்றன.
கேரளா, மேற்கு வங்கம், புதுவை ஆகிய மாநில முதல்வர்கள் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேபோல் தங்கள் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை என கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தக் கருத்தும் கூறவில்லை.
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இந்த தடை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக போராட்டம் நடத்தியது.
அப்போது பேசிய திமுக செயல் தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் பசுவதை சட்டத்தை எதிர்த்து அனைவரும் போராடும்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாயைத் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் கூட, மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.