டாக்டருக்கு வாய் பூட்டு?
அரசியல் தலைவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் டாக்டருக்கு சில நாட்களாக வாய்பூட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: முக்கிய அரசியல் தலைவர் கடந்த நீண்ட நாட்களாக பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பிரபல மருத்துவமனையின் டாக்டருக்கு தற்போது வாய்பூட்டு போடப்பட்டுள்ளதாம்.
மருத்துவமனை நிர்வாகம் ரிப்போர்ட் கொடுத்த நிலையில் சில வாரங்களாக டாக்டரே விளக்கம் அளித்து வந்தார். பொருளாதார இழப்புகளால் நொந்து போயிருந்த அவர், பேட்டியின் போது கூடுதலாக வீட்டுக்குச்செல்வது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என சொன்னார்.
ஒவ்வொரு பேட்டியின் போதும் இதை அழுத்தமாக சொல்வதில் கவனம் செலுத்தினார் டாக்டர். அதாவது, மாப்பிள்ளை அவர் தான். ஆனா, அவர் போட்டிருக்கும் சட்டை என்னது என்கிற பாணியில் இருந்தது டாக்டரின் பேட்டி.
உடல்நிலை தேறிய நிலையில் வீட்டுக்குச்செல்ல ஏன் முடிவெடுக்கவில்லை. அப்படின்னா நல்லாயிருக்கார்ங்கிற செய்தியெல்லாம் பொய்யா? என்று பலரும் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தான், பேட்டி கொடுக்க வேணாம் என டாக்டருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டதாம். அதனால்தான் ஒரு வாரமாக மீடியாக்களில் அவரது வாய்ஸ் வரவில்லை என்கிறார்கள் தொண்டர்கள். இருப்பினும், டாக்டரின் பேட்டி வரவில்லையெனில் அதுவே கான்ட்ராவெர்சியை உருவாக்கும் என முக்கிய நபர் கூறவே, மீண்டும் டாக்டரை பேட்டி தரச்சொல்லலாமா? என யோசித்து வருகின்றனராம்.