அது ஏன் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்பதில் ஈ.வி.கே.எஸ். குறியாக உள்ளார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மண்ணை கவ்வியது. இதையடுத்து தேசிய அளவிலும் சரி தமிழக அளவிலும் சரி காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரசிகர் பட்டாளம் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர பாஜக பிரயத்தனம் செய்து வருகிறது.

ரஜினியோ பிடிகொடுக்காமல் இருந்த நிலையில் அவர் அனைவருக்கும் பொதுவானவர் அதனால் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அவர் எந்தநேரம் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்றாரோ சூப்பர் ஸ்டார் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் தான் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து ரஜினி கூறுகையில்,
எனக்கு அரசியல் பற்றி கொஞ்சம் தெரியும், அதன் ஆழமும் தெரியும். நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன். நான் அரசியலுக்கு வருவது கடவுளின் கையில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல் பற்றி பேசிய மறுநாளே அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று இளங்கோவன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை இவ்வாறு பேசியிருந்தார் இளங்கோவன். தற்போது 2வது முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதில் காமெடி என்னவென்றால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வருபவர். ஆனால் அவரையும் லிஸ்ட்டில் சேர்த்து விட்டுள்ளார் இளங்கோவன்.
ஒருவேளை ரஜினி அரசியலுக்கு தப்பித் தவறி வந்து விட்டால் பாஜக அவரின் ஆதரவை பெற்று தமிழகத்தில் வலுவாகிவிடுமோ என்று இளங்கோவன் அஞ்சுகிறாரோ?












Click it and Unblock the Notifications