'ஜெ. நன்றாக இருக்கிறார்... பேனாவை பிடித்து கையெழுத்திட மட்டும் முடியவில்லை'
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்... அவரது கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்ட காரணத்தால் பேனாவை பிடிக்க முடியாமல் பெருவிரல் ரேகை வைத்தார் என அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமடைந்துவிட்டார்.... கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டதால் பேனாவை பிடித்து கையெழுத்திட முடியாமல் வேட்பாளர்களுக்கான படிவத்தில் பெருவிரல் ரேகையை வைத்தார் என சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பி. பாலாஜி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார். இதனால் அவரது உடல்நலம் குறித்தும் சட்டப் பிரச்சனைகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை ஏற்கலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது. இதனிடையே பெருவிரல் ரேகை மட்டுமே வைக்கும் நிலையில்தானா ஜெயலலிதா உடல்நலம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையைப் பெற்ற சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி அளித்த விளக்கம்:
ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார்.
ஜெயலலிதாவுக்கு கைகள் வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கை வலி அதிகமாக இருக்கிறது. பேனாவை பிடித்து கையெழுத்திட அவரால் முடியவில்லை. ஆகையால் பெருவிரல் ரேகையை வைத்தார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.
இவ்வாறு மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications