டாக்டர்கள் போராட்டதை போலீசார் ஏன் தடுக்கவில்லை? நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி
சென்னையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் என்ன செய்துக் கொண்டிருந்தனர் என சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார்.
சென்னை பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் என்ன செய்துக் கொண்டிருந்தனர் என சென்னை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக விளாசியுள்ளார். டாக்டர்களின் போராட்டத்தை போலீசார் ஏன் தடுக்கவில்லை என்றும்
நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் போராட்டத்தால் சிகிச்சையளிக்க ஆள் இல்லாமல் 4 நோயாளிகள் உயரிழந்தனர். மருத்துவர்களின் போராட்டத்தால் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போலீசாரை விளாசிய நீதிபதி
இந்நிலையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் போலீசாரை சரமாரியாக விளாசினார்.

போராட்டத்தை ஏன் தடுக்கவில்லை?
பயிற்சி டாக்டர்கள் 2 மணி நேரமாக போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்ளின் போராட்டத்தை போலீசார் ஏன் தடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

போலீசார் எங்கிருந்தனர்?
இந்த போராட்டத்தின் போது, நோயாளிகள் பாதிக்கப்பட்டது குறித்த வீடியோ கடந்த 16, 17ம் தேதிகளில் வெளிவந்துள்ளது. போராட்டம் நடைபெற்ற அன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் உயரதிகாரிகள் எங்கிருந்தனர் என்றும் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து போராட்டத்தின் போது நோயாளிகள் சிரமப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications