'அம்மா' மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் மோடி பங்கேற்பு ஏன்? எல்லாம் ஒரு கணக்குத்தான்!
Recommended Video

சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டபோது அதில் பங்கேற்காத பிரதமர் நரேந்திர மோடி, அம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் பங்கேற்பது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் அளிக்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தப்படும் முக்கியமான கவர்ச்சி திட்டம் இதுவாகும். அம்மா கிரைண்டர், ஃபேன் என்ற பெயர்களில் ஜெயலலிதா கவர்ச்சிகர திட்டங்களால் பரவலான மக்களை சென்றடைந்தார்.

கவர்ச்சி திட்டம்
எடப்பாடி பழனிச்சாமி அரசும், ஜெயலலிதாவின் அதே போன்ற கொள்கைகளை பின்பற்றி, மானிய விலை ஸ்கூட்டர்களை பெண்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியான பெண்களை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது எடப்பாடி அரசு. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்கிறார் மோடி.

மோடி வரவில்லை
சில நாட்கள் முன்பாக, சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் மோடியை அதிமுக சார்பில் அழைத்ததாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மோடி வரவில்லை என்றபிறகு, தாங்கள் அவரை அழைக்கவேயில்லை என அதிமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மோடிக்கு நற்பெயர்
அதேநேரம், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் மோடி பங்கேற்க காரணம், வாக்கு வங்கி வேட்டைதான் என கூறப்படுகிறது. "எடப்பாடி அரசின் திட்டத்தை மோடி கிட்னாப் செய்துவிட்டார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அமைச்சர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், அது உண்மைதான்.

ஒரு விளம்பரம்
பெரும்பாலான பெண்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, பாஜகவுக்கான அரசியல் ஆதாயத்தை தேடும் முயற்சிதான் மோடியின் பங்கேற்பு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒரு பைசா செலவு இல்லாமல், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தால், பாஜகவுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்றால் அதில் மோடி பங்கேற்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.

மாற்றம்
சமீபத்தில்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கை அதிகரித்துவிட்டது என்றார். தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அதிமுக அரசை தீவிரமாக விமர்சனம் செய்ய துவங்கியிருந்தனர். இந்த நிலையில்தான், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பதில் இருந்தே, அரசியல் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications