சேலம் மாணவி தற்கொலை ஏன்.. ஆசிரியை திட்டினாரா.. நடந்தது என்ன?
மாணவிகள் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர ஆசிரியர்கள் கூறியதாகவும் மனமுடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சேலம்: தனியார் பள்ளி மாணவிகளான கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறியதாகவும், அதிர்ச்சியடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் ஜெயராஜ் என்பவரின் மகள் ஜெயராணி மற்றும் சக்திவேலின் மகள் கவிஸ்ரீ. இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மாடியில் இருந்து குதித்தனர்
இந்நிலையில், இன்று காலை சேலம் 2வது அக்ரஹாரா தெருவில் உள்ள உணவகத்தின் 4வது மாடியிலிருந்து கவிஸ்ரீ, ஜெயராணி ஆகிய இரண்டு மாணவிகளும் கீழே குதித்தனர். அதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே தலை உடைந்து உயிரிழந்தார்.

உயிருக்கு போராடும் மாணவி
கவிஸ்ரீ உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கவிஸ்ரீக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெருங்கிய தோழிகள்
நெருங்கிய தோழிகளான கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி ஆகியோர் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், இருவரையும் ஆசிரியர் பிரித்து உட்கார வைத்துள்ளார். அதனால் மாணவிகள் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள கொண்டதாக கூறப்படுகிறது.

தோழிகள் அதிர்ச்சி
மாணவிகள் மரணம் பள்ளி மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஆசிரியர்கள்,கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், இருவரையும் அழைத்து அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறினோம் என்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

தீவிர விசாரணை
தற்கொலை செய்ததற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே மாணவிகளின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த உண்மைத்தகவல் தெரியவரும்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications