சேலம் மாணவி தற்கொலை ஏன்.. ஆசிரியை திட்டினாரா.. நடந்தது என்ன?
மாணவிகள் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர ஆசிரியர்கள் கூறியதாகவும் மனமுடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சேலம்: தனியார் பள்ளி மாணவிகளான கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறியதாகவும், அதிர்ச்சியடைந்த மாணவிகள் மாடியில் இருந்து குதித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் ஜெயராஜ் என்பவரின் மகள் ஜெயராணி மற்றும் சக்திவேலின் மகள் கவிஸ்ரீ. இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மாடியில் இருந்து குதித்தனர்
இந்நிலையில், இன்று காலை சேலம் 2வது அக்ரஹாரா தெருவில் உள்ள உணவகத்தின் 4வது மாடியிலிருந்து கவிஸ்ரீ, ஜெயராணி ஆகிய இரண்டு மாணவிகளும் கீழே குதித்தனர். அதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே தலை உடைந்து உயிரிழந்தார்.

உயிருக்கு போராடும் மாணவி
கவிஸ்ரீ உயிருக்குப் போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கவிஸ்ரீக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெருங்கிய தோழிகள்
நெருங்கிய தோழிகளான கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி ஆகியோர் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், இருவரையும் ஆசிரியர் பிரித்து உட்கார வைத்துள்ளார். அதனால் மாணவிகள் மனமுடைந்து தற்கொலை செய்துள்ள கொண்டதாக கூறப்படுகிறது.

தோழிகள் அதிர்ச்சி
மாணவிகள் மரணம் பள்ளி மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஆசிரியர்கள்,கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் வகுப்பறையில் பேசிக்கொண்டே இருந்தால், இருவரையும் அழைத்து அவர்களது பெற்றோர்களை அழைத்து வர கூறினோம் என்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

தீவிர விசாரணை
தற்கொலை செய்ததற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே மாணவிகளின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த உண்மைத்தகவல் தெரியவரும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications