சசிகலா சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய காரணம் இதுதான்
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் தலையிட தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுதான் சசிகலா மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உறுதிசெய்தது.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்தார். எனவே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே தங்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் தவறு இல்லை என்றும், எனவே மறு சீராய்வு மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்றும், அதற்கான அவசியம் எழவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்வதற்கு காரணம் கூறியுள்ளார்கள்.