சார் எனக்கு ஒரு டவுட்டு.. வைரலாகும் வாட்ஸ்அப் கேள்வி!
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, அதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்தியிருக்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் சுற்றி வருகிறது.
சென்னை: சட்டசபையில், சபாநாயகர் ஏன் ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதித்திருக்க கூடாது என்ற கேள்வியோடு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாக சுற்றி வருகிறது.
அந்த மெசேஜ் இதுதான்: சாதாரண மக்கள் (வாக்காளர்கள்) ஓட்டளிக்க பிராசாத்தை ஒரு நாள் முன்பே நிறுத்தி 24 மணி நேரம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் சரிதானே.
ஒட்டு போடும் வாக்காளர்களை வாக்குசாவடிக்கு வேட்பாளர்கள், அழைத்து வந்தால் குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம் சரிதானே.
அப்புறம் ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்கள் மக்களை சந்திக்கவில்லை?
அவர்களை ஓட்டு போட்டு முடியும் வரை பாதுகாப்பு வளையத்தில் வைத்தது சரியா?
MLA வை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டுமாம்..
MLAக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவருக்கும் தெரியும்படி வாக்களிக்கலாமா.. இது நியாமா? - இப்படிக்கு நான் வாக்காளன்.
இதுதான் அந்த மெசேஜ். கட்சி தாவலை கண்காணிக்க ரகசிய வாக்கெடுப்பு உதவாது என்பது ஆளும் தரப்பு வாதமாக உள்ளது. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கும் நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் நிர்பந்தத்தின் பேரில் வாக்களித்தனர். எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.