லொடுக்கு பாண்டி சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி!
லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முக்குலத்தோர் படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய பேச்சு இன்றும் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார் கருணாஸ். மேலும் சாதி ரீதியாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

எந்நேரத்திலும் கைது
இதுதொடர்பாக அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருணாஸை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்க முடியாது
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வன்முறையை தூண்டும் விதமாக கருணாஸ் பேசியதை ஏற்க முடியாது என்றார்.

கருணாஸுக்கு நன்றி
மேலும் அவர் பேசியதாவது, என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
ஆனால் லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதியரீதியாக பேசியதற்கு திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின். திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. திமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலே மு.க. ஸ்டாலின் நேரம் முடிந்துவிடும்.

தகுதியில்லை
ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம். ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?

ஸ்டெர்லைட் திறக்கப்படாது
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications