"கியூ"வில் தவிக்கும் மக்கள்... விழிபிதுங்கும் வாழ்க்கை.. கல்லுளி மங்கனாக இருக்கும் தமிழக அரசு

ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொதுமக்கள் 1 வார காலமாக வீதிகளில் தத்தளித்து வருகின்றனர்.. ஆனால் தமிழக அரசோ எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் மவுனமாக இருந்து வருகிறது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி 1 வாரமாகிவிட்டது... இன்னமும் மக்களிடையே இயல்பான பணப்புழக்கம் ஏற்படவில்லை.

வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நாள்தோறும் நீண்ட வரிசைகளில் பணத்துக்காக மக்கள் காத்து நிற்கின்றனர். பணம் கிடைக்காமல் இயல்பு வாழ்க்கை நாசமாகிக் கிடக்கிறது.

3 மாதமாகுமா?

3 மாதமாகுமா?

தற்போதைய நிலையைப் பார்த்தால் இன்னும் 3 மாதங்களுக்கு கூட நிலைமை சீராகிவிடுமா? என்றெல்லாம் கூட சொல்ல முடியாது.

டெல்லி சட்டசபை

டெல்லி சட்டசபை

தற்போது டெல்லி மாநில அரசு, மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்பதற்கு எதிராக அவசர சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிவிட்டது.

மவுனமாக...

மவுனமாக...

ஆனால் தமிழக அரசோ கடந்த ஒரு வார காலமாக எந்த ஒரு சிறப்பு ஏற்பாடு அல்லது மாற்று ஏற்பாடு என்பது குறித்தெல்லாம் எந்த ஒரு கருத்தையும் சொல்லவே இல்லை. தொடர்ந்தும் 8-வது நாளாக தமிழக அரசு மவுனமாக இருந்து வருகிறது.

ஆறுதல் அறிவிப்பு வருமா?

ஆறுதல் அறிவிப்பு வருமா?

இது மக்களை கடும் எரிச்சல்பட வைத்திருக்கிறது. மத்திய அரசு ஒருபக்கம் அடுத்தடுத்து துயரத்தைத் தரும் நிலையில் தமிழக அரசு மவுனத்தைக் கலைத்து ஆறுதலான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+