ஆளுநரைத் தேடிப் போய் திட்டு வாங்கனுமா.. விஷால் ஜகா வாங்க இதுதான் காரணமா!
ஆளுநரை சந்திக்காமல் விஷால் ஜகா வாங்கியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் தனது பெயரில் முன்மொழிந்த இருவர் பல்டி அடித்து, அதை மறுத்துள்ள பின்னணியில், தேவையில்லாமல் ஆளுநரைப் போய்ப் பார்த்து அவரது விமர்சனத்தைப் பெறாமல் தவிர்க்கும் முகமாகவே அவருடனான சந்திப்பை விஷால் ரத்து செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் மீதான பரிசீலனை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அவரை முன்மொழிந்தவர்கள் என்று கூறப்படும் சுமதி, தீபன் ஆகியோர் தாங்கள் முன்மொழியவில்லை என்றும் வேட்புமனுவில் உள்ளது தங்களின் கையெழுத்து இல்லை என்றும் புகார் அளித்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார். பின்னர் இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.

தேர்தல் ஆணையமும் கைவிரித்தது
ஆனால், முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதால் அத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததாக விஷால் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை வைத்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால் அங்கும் அவரது பேச்சு எடுபடவில்லை. மாறாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடமே முறையிடுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

ஆளுநரிடம் நேரம் கேட்ட விஷால்
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட கூட உரிமையில்லையா? என்றும் தான் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இதுபோன்ற சதி நடைபெறுவதாகவும் ஆளுநரிடம் முறையிட விஷால் முடிவு செய்திருந்தார். அதற்காக நேரமும் அவர் கேட்டிருந்தார்.
முன்மொழிந்தவர்கள் வீடியோ
இதனிடையே விஷால் குறிப்பிட்ட சுமதி, தீபன் ஆகிய இருவரும் நேற்று ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து, விஷாலின் வேட்பு மனுவைத் தாங்கள் முன்மொழிந்து கையொப்பமிடவில்லை என்று தெரிவித்தனர். இவர்கள் கூறியதை வாக்குமூலமாக தேர்தல் பார்வையாளர்களும் பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்டனர்.

திடீர் உடல்நலம் பாதிப்பு
இந்நிலையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க விஷாலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு என்று கூறி விஷால் தனது திட்டத்தை ரத்து செய்து விட்டார். ஏன் இந்த திடீர் முடிவு என்பது குறித்து வேறு சில தகவல்களும் உலா வருகின்றன.

நீர்த்து போகும் காரணம்?
முன்மொழிந்த தீபனையும், சுமதியையும் யாரோ மிரட்டியதாக விஷால் இத்தனை நாட்கள் கூறி வந்தார். இது அவருக்கு பலமான பாயிண்டாக இருந்தது. ஆனால் தற்போது தீபனும், சுமதியும் தாங்கள் மிரட்டப்படவில்லை என்றும் விஷாலை முன்மொழியவில்லை என்றும் கூறியதால் விஷாலின் பாயிண்ட் நீர்த்து போயுள்ளது.

ஜகா வாங்கினார் விஷால்
இப்படிப்பட்ட நிலையில் ஆளுநரிடம் போய், எனக்கு அநீதி நடந்து விட்டது என்று முறையிட்டால், ஆளுநர் இந்த வீடியோவை சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால் எப்படிப் பதில் சொல்வது என்பதால்தான் தனது சந்திப்பையே விஷால் கைவிட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications