For Quick Alerts
For Daily Alerts
Just In
மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவர்... குடிபோதையில் கொடூரம்- வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்த கணவரை கைது செய்யக்கோரி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் முருகன் மது அருந்திவிட்டு சாந்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதிய வேளையில் அவர்கள் இருவரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையில் இருந்த அவர், சாந்தியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.
Comments
tirupur wife murder protest oneindia tamil videos திருப்பூர் மனைவி கணவன் கொலை போராட்டம் ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
A drunken husband has killed his wife by putting a stone on her head on Friday in Velayuthampalayam, Tirupur.
Story first published: Saturday, June 18, 2016, 17:21 [IST]