ஒற்றையாட்சியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது: இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
சென்னை: இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2 நிர்வாகங்கள் செயல்படுகின்றன. எங்களது மாகாண சபை ஒரு நிர்வாகத்தையும் இலங்கை அரசு மற்றொரு நிர்வாகத்தையும் நடத்துகிறது.
மாகாண சபையின் செயலாளர் என்பவரைக் கூட எங்களுடன் ஆலோசிக்காமலேயே இலங்கை அரசு நியமித்திருக்கிறது. ஆளுநர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஒரு நிர்வாகமாகவும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் ஒரு நிர்வாகமாகவும் இயங்கி வருகிறோம்.
வடக்கு மாகாணத்தில் இலங்கை அரசு ரயில் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவது உலகுக்கு அங்கே அனைத்தும் நன்றாக உள்ளது எனக் காட்டுவதற்காகத்தான். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.

போருக்குப் பின் தமிழ் மக்களுக்கு பிரத்யேகத் தேவைகள் இருக்கின்றன. இதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். ஆனால் இலங்கை அரசு முழுமையான நிதி எங்களுக்குக் கிடைக்கவில்லை.
13வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக தமிழர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. இதை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார ரீதியான பயன் கிடைக்கும்.
இந்தியாவானது தனது சொந்த நலனைக் கருத்தில் கொண்டே தொடக்க காலம் முதல் ஈடுபட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையின் ஒற்றைஉயாட்சி மூலமாக அரசியல் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications