ஆலந்தூருக்கு எப்போது இடைத் தேர்தல்..?
சென்னை: தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதால், அத்தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண்ருட்டியார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை ஏற்றுள்ளார் சபாநாயகர். இதையடுத்து அத்தொகுதி காலியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் அறிக்கை அனுப்பும். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும்.
ஒரு காலியிடத்திற்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆலந்தூர் தொகுதிக்கு உடனடியாக இடைத் தேர்தல் வருமா அல்லது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா என்பது தெரியவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது என்பதால் ஆலந்தூருக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications