தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே.. திருமாவளவன்
அதிமுகவின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தேவர், கவுண்டர் சமூகத்தினர் முயற்சிக்கின்றனர். இனியும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கிடைத்து வந்த தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடருமா என்பது சந்தேகம் என்கிறார் திருமாவள
சென்னை: எம்ஜிஆர், ஜெ.வுக்கு கிடைத்த தலித் வாக்குகள் அதிமுகவுக்கு தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.

ஜாதிய சலசலப்பு
இருவருமே தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களை அள்ளிக் கொடுத்த கவுண்டர் சமூகத்துக்கு அதிமுக தலைமைப் பொறுப்பில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் எனவும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

20% தலித் வாக்குகள்
இப்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கை அதிமுகவில் ஓங்கும் நிலையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு 20% வாக்குகளை அள்ளிக் கொடுத்து வந்த தலித் வாக்கு வங்கி இனி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளதாவது:

ஜெ. மீது நம்பிக்கை
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே ஜாதிகளைக் கடந்த தலைவர்களாகவே இருந்தனர். ஜெயலலிதா தலித் தலைவராக இல்லாத போதும் கூட தலித் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

சந்தேகம்தான்...
எம்.ஜி.ஆருக்கு இருந்த தலித் வாக்கு வங்கி ஜெயலலிதாவுக்கும் தொடர்ந்தது. ஆனால் ஓ பன்னீர்செல்வமோ அல்லது வேறு ஒருவரோ அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் நிலையில் அந்த தலித் வாக்குகள் தொடர்ந்து கிடைக்குமா என்பது சந்தேகமே.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

3 அமைச்சர்கள்
அதிமுகவில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் 9 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
28 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு 3 அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ள்ளது. ஆனால் 31 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தலித் சமூகத்தில் வெறும் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications